அத்துருகிரிய பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் 5 விமானப்படையினர் இருந்ததாக விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் வின்ங் கமாண்டர் கிஹான் செனவிரட்ன தெரிவிக்கின்றார்.
விமானத்தை தரையிறக்குவதற்கு விமான ஓடுதளம் தெளிவாக காட்சியளிக்கவில்லை என இரத்மலானை விமான கட்டுப்பாட்டு நிலையத்திற்கு விமானி தகவல் வழங்கியதாக விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
அத்துருகிரிய பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விமான விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இந்த விமான விபத்தில் மற்றுமொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானம் வீழ்ந்த சந்தர்ப்பத்தில் அருகிலிருந்து மூன்று வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, இந்த விமான விபத்தில் காயமடைந்த நபர் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments