‘Kalpitiya Voice’ எமது முகநூல் பெயரில் போலி முகநூல் கணக்கு ஒன்று ஏப்ரில் மாதம் 15ம் திகதி உருவாக்கப்பட்டு குறித்த ஒரு அரசியல் வாதியின் தேர்தல் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
போலி முகநூல் கணக்கு இணைப்பு…
கற்பிட்டி பிராந்தியத்தில் மாத்திரம் இல்லாமல் புத்தளம் மாவட்டம் , கிழக்கு மாகாணம் ஏனைய தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் ஊர்களிலும் மற்றும் வெளிநாடுகளில் வாழும் எமது பிராந்திய மக்கள் மத்தியில் எமது ஊடக நிறுவனத்து க்கு என்று தனி மதிப்பும் இடமும் உண்டு. இதை உதாசீன படுத்தும் வண்ணம் இவர்கள் போலி முகநூல் மூலம் எமது ஊடக நிறுவன பெயரை பயன்படுத்தி ஒரு அரசியல் வாதிக்கு இலாபம் தேட முயற்சிக்கும் விடயம் ஒருவகையான மோசடியே! இதுவன்மையாக கண்டிக்கதக்க செயல்.
ஒரு பொறுப்பு வாய்ந்த ஊடக அமைப்பு என்ற வகையில் குறித்த அரசியல்வாதியின் நேரடி கவனத்திற்கு நாம் இதனை கொண்டு செல்ல முயற்சிக்கறோம், இந்த முகநூல் கணக்கில் வரும் பதிவுகளுக்கும் எமது ஊடக அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் எமது ஊடக சொந்தகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் உத்தியோகபூர்வ கணக்கும் பக்கமும் குழுமமும் கீழ இணைப்பும் உள்ளது .
Like Page
FB Groups
FB Account
Admin
0 Comments