சில்லறை பொருட்களிலே மக்களுக்கு சேவை செய்யவென அரசினால் உருவாக்கப்பட்டதே சதோச விற்பனை நிலையங்கள்.
இது போல மருத்துவ துறையிலே மக்களுக்கு சேவையை வழங்க உருவானதே ஒசுசல என்கிற மருத்துவ நிலையங்கள்.
சதோச கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குவது போல , ஒசுசல சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும்.
இன்று அதிகமாக வைத்தியசாலையிலும் , தனியார் மருத்துவ நிலையங்களிலும் , மக்களுக்கு Pharmacy களிலே மருந்து எடுக்கும்படி துண்டுகள் கொடுக்கும் போது , ஒரு ஒசுசல நிலையமிருக்கும் இடத்திலே அது மக்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாகும்.
ஏனெனில் , ஏனைய பாமசிகளை விட ஒசுசலவிலே மருத்துவ பொருட்களுக்கான விலைகள் மிகவும் குறைவாகும்.
ஒசுசலவிலே அதிகம் கிடைப்பது SPC ன் மருந்துக்கள் , அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் மருந்துக்கள் - ஏனெனில் சுகாதார அமைச்சின் கீழான இந்த கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே , ஒசுசல இயங்குகிறது.
நாடு முழுவதும் 200 ற்கும் மேலான ஒசுசல நிலையங்கள் இயங்குகிறது.
இதை இரண்டாக பிரித்து Frenchise Osusala , Rajya Osusala என்று வழங்கியுள்ளார்கள்.
Frenchise Osusala நாடு முழுவதும் 150++ கிளைகளை கொண்டு இயங்குகிறது - அதாவது இதனை ஒருவர் , தங்களது பகுதியிலே செய்வதற்கு முகவராக செயலாற்றுவது.
இது பெரியளவிலே மக்களுக்கு பிரயோசனமாக போவதில்லை.
Rajya Osusala நாடு முழுவதும் 50++ கிளைகளை கொண்டுள்ளது.
இதனால் மக்களுக்கு பெரியளவிலே நன்மையுண்டு.
மக்களுக்கு இதிலே பெரிய நன்மையுள்ளது என்கிற விடயமும் , மருத்துவ துறையிலே இப்படியான ஒரு நிலையமுண்டு என்கிற விடயமும் , மக்களிலே பலருக்கு தெரியாது என்கிற ஒரு பக்கமும் உண்டு.
அதனையும் தெளிவாக்கவே வேண்டும்.
இப்படியாக இயங்குகிற அரச ஒசுசலவிலே , புத்தளம் மாவட்டத்திலேயே இரண்டே இரண்டு நிலையங்களே இயங்குகிறது.
ஒன்று சிலாபத்திலே , மற்றொன்று ஆனமடுவையிலே.
புத்தளம் நகருக்கும் இந்த நிலையம் ஒன்று தேவை என்கிற விடயத்தை , கொரோனா காலத்திலேயே உணர்ந்த நான் , பல அரசியல்வாதிகளிடம் இது தொடர்பாக பேசியுமுள்ளேன்.
எழுத்து பதிவாக , வீடியோ பதிவாகவும் வெளியிட்டுமிருக்கிறேன்.
ஒரு அரசியல்வாதி நினைத்தால் , இதனை முயன்று , இங்கு ஒரு கிளையை கொண்டு வருதல் , கடினமான ஒரு பணி கிடையாது.
பல மக்கள் இதனால் நன்மையடைவர்.
ஆனால் , பல்லாயிரக்கணக்கான மக்களது நன்மையடைதலை விட , ஒரு சில தனியார் பாமசி உரிமையாளர்களது முக சுழிப்புக்கு ஆளாக வேண்டுமே என்கிற வகையிலே , அரசியல்வாதிகள் சிந்திக்கிறார்களோ தெரியாது.
ஏனெனில் , ஒசுசல ஒன்றின் கிளை , இங்கு வருவதை , பாமசி நடத்தும் அதிகமானோர் விரும்ப மாட்டார்கள் என்பதும் கசப்பான உண்மையே !
இன்று , முகநூலிலே உள்ள ஊர்மக்கள் அனைவர் சார்பாகவும் , மீண்டுமொரு முறை , இவ்விடயத்தை இங்கே சமர்ப்பிக்கிறேன்.
உங்களால் முடிந்த முயற்சிகளையும் செய்யுங்கள் , அதிகாரத்திலே உள்ளோருக்கு உங்களால் முடிந்த அழுத்தங்களையும் வழங்குங்கள்.
0 Comments